search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்"

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கருப்பணன் எம்..எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் தங்கமுத்து, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி தலைவர் சிவக்குமார்,

    தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபால் கிருஷ்ணன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன்ராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் பொன் சேர்மன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம், மாதையன், பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர் நாராயணன், ஜெயக்குமார், குப்புசாமி, நிர்வாகிகள் ராகேஷ் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய வேலைவாய்ப்பு கட்டுப்படுத்த திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் தங்களது கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநகர மாவட்ட அதிமுக சார்பில் இன்று திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டம்

    மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் துணை செயலாளர்கள் ஜெயபிரகாஷ், உமா விஜயகுமார், தாஸ், வக்கீல் பி.எஸ்‌.பழனி, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் நாகு, ஏ.ஜி பாண்டியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், எழில், வன்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • திரளான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்

    ஊட்டி:

    மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் கே.ஆர். அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளா் கப்பச்சி வினோத் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னா் சொத்து வரி, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக விலை உயா்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனா். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க முயற்சித்து வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் சாா்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து இலவச மின் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டிராஜி, ஒசிஎஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுனர்அணி நகர செயலாளரும், நொண்டிமேடு கிளை செயலாருமான கார்த்திக், கிளை செயலாளர் பிரபுதுர்கா, நகரமன்ற உறுப்பினர்கள் லயோலோ குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடலூரில் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கிழக்கு ஒன்றியம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது

    ஊட்டி:

    தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் உதவித் தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது, தொடர்ந்து வழங்க வேண்டும், குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூடலூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மில்லர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாந்தி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×